தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, தலைமைச்செயலர் கே.சண்முகம், நேற்று மாலையில் சென்னை தவிர இதர மாவட்டங்களின் ஆட்சியர்கள், கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகளுடன் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், டிஜிபி ஜே.கே.திரிபாதி, வருவாய்த்துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் கே.பனீந்திர ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில், மதுரை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில், கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். சென்னையில் நடத்தப்பட்டதைப்போல் காய்ச்சல் முகாம்களை நடத்தி இணை நோய்கள் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி இறப்பைக் கட்டுப்படுத்த தலைமைச் செயலர் கே.சண்முகம் அறிவுறுத்தினார்.