ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 28 ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்ட விவசாயிகள் தஙகள் விவசாய சாகுபடிக்காக, பவானி சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, முதல் போக பாசனத்திற்காக பவானி சாகர் அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 28 ஆம் தேதி வரை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். தண்ணீர் திறப்பின் மூலம் கோபி, பவானி, அந்தியூர் வட்டங்களில் உள்ள 24,504 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
பவானி சாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரை சிக்கனமாக பயன்படுத்தவும், உயர் மகசூல் பெற வேண்டும் என்று விவசாய பெருமக்களைக் கேட்டக் கொள்கிறேன். என்று முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
